சென்னையில் உள்ள ராஜஸ்தான் அசோசியேஷன் சிறந்த பொதுச் சேவைக்காக வழங்கிய விருது
இலக்கியச் சிந்தனை அமைப்பு இவர் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ என்னும் நூலை 2018-ஆம் ஆண்டிற்கான இரண்டு சிறந்த நூல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியது.
‘இலக்கியத்தில் மேலாண்மை’ புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய சிறந்த நூல் விருது வழங்கியது. இந்த விருது பாரதப் பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டது.
‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது
வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது
அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது
‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை முதல் பரிசளித்தபோது, தலைமைச் செயலாளராக இருந்ததால் அதை ஏற்க மறுத்தார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்ட சர் ராஜா முத்தையா செட்டியார் விருது
‘ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும்’ மற்றும் ‘ஏழாம் அறிவு’ நூல்களுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது
‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது
‘வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் சிறந்த கவிதைத் தொகுப்பு விருது